Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
20 கிலோ இலவச அரிசி-மகப்பேறு விடுப்பு: ஜெயலலிதாவுக்கு பெண்கள் பாராட்டு; அரசு ஊழியர்கள் வரவேற்பு
Page 1 of 1
20 கிலோ இலவச அரிசி-மகப்பேறு விடுப்பு: ஜெயலலிதாவுக்கு பெண்கள் பாராட்டு; அரசு ஊழியர்கள் வரவேற்பு
சென்னை, மே.17-
தமிழக
முதல்- அமைச்சராக 3-வது முறையாக ஜெயலலிதா நேற்று பொறுப்பு ஏற்றுக்
கொண்டார். அவர் நேற்று பதவி ஏற்றவுடன் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தேர்தல் அறிக்கையில் கூறிய சில வாக்குறுதிகளை முதன் முதலில்
நிறைவேற்றினார்.
நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்
அனைத்தும் ஏழை-எளிய மக்கள் படித்த பெண்கள், பட்டதாரிகள், பெண் அரசு
ஊழியர்கள் பலன்பெறக்கூடியதாகும். அவர் பதவி ஏற்றவுடன் அறிவித்த இந்த
சாதனைகளை பெண்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
பிரேமகுமாரிபெண் அரசு ஊழியர்)
நான்
கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் அறிவித்த இந்த முதல் சலுகைகள்
பாராட்டுக்குறியதாகும். அதுவும் குரிப்பாக அரசு பணியில் ஈடுபடும் பெண்
ஊழியர்களுக்கு 6 மாதம் பேறு கால விடுப்பு அளித்திருப்பது
வரவேற்கக்கூடியது.
இந்த கோரிக்கையை நீண்ட காலமாக
அரசுக்கு அளித்து வந்தோம். அது தற்போது நிறைவேறி உள்ளது. வேலைக்கு
செல்லும் பெண்கள் பேறு காலத்தில் விடுமுறை கிடைக்காமல் சிரமப்பட்டு
வந்தார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு பெரும்
மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதனால் பிறந்த
குழந்தையை மட்டும் அல்ல குடும்பத்தையும் கவலை இல்லாமல் கவனித்து
கொள்ளலாம். இந்த சலுகை எல்லா பெண்களுக்கும் வரப்பிரசாதமாகும். ஜெயலலிதா
ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களை கவனிக்க மாட்டார் என்ற நிலையை மாற்றி
அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதுவும் பெண்களுக்கு
இந்த சலுகையை வழங்கி இருப்பது ஒட்டு மொத்த பெண் சமுதாயத்திற்கு செய்த
பெரும் சாதனையாகும்.
ஏகாத்தம்மாள்புளியந்தோப்பு, ராஜாத்தோட்டம்)
ஏழைகளுக்கு
20 கிலோ இலவச அரிசி வழங்கி ஏழைகள் வயிற்றில் பாலை வார்த்துள்ளார்
ஜெயலலிதா. அன்றாட பசி- பிணியில் இருந்து ஏழை மக்களை காப்பாற்றுவதற்காக இதை
அறிவித்த முதல்வருக்கு எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
இதுவரை
ஒரு ரூபாய் கொடுத்து ஒரு கிலோ அரிசி வாங்கினோம். இனி அதற்கும் வேலை இல்லை.
அரிசியை முழுமையாகவே இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். நாங்கள் வெறும்
பையை மட்டும் கொண்டு சென்றால் போதும். அரிசி கிடைத்து விடும். ஏழை-
எளியவர்களின் பசியை தீர்த்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடானகோடி நன்றி.
மகாலட்சுமி: (புளியந்தோப்பு)
ரேசன்
கடைகளில் இப்போது அரசு வழங்கும் 20 கிலோ அரிசியை முழுமையாக தருவதில்லை. 10
அல்லது 15 கிலோ மட்டுமே தருகிறார்கள். அதிலும் 5 கிலோ பச்சரிசி, 10 கிலோ
புழங்கல் அரிசி மட்டுமே விநியோகம் செய்கிறார்கள். மீதி அரிசியை தராமல்
ஏமாற்றி விடுகிறார்கள். அரிசி தரமானதாக இல்லை. கல், உமி போன்றவை அதிகம்
உள்ளன. தரமான அரிசியை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
சுசீலா:- (குடும்ப தலைவி)
20
கிலோ இலவச அரிசி வழங்குவது மகிழ்ச்சி அளித்துள்ளது. அந்த அரிசி எங்களுக்கு
முழுமையாக கிடைக்க அரசு உதவ வேண்டும். தரமான அரிசியை தருவார் என்று
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நம்பிக்கை இருக்கிறது.
கலைவாணி: (பி.காம். பட்டதாரி)
ஏழை
பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவியாக ரூ.50 ஆயிரம் வழங்க இருப்பது
மகிழ்ச்சி அளிக்கிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் தங்களுக்கு
திருமணம் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற கவலையில் இருந்தனர். உதவி
தொகையுடன் 1/2 பவுன் தங்க தாலியும், ஜெயலலிதா கொடுத்துள்ளார். இதன் மூலம்
என்னைப் போன்ற திருமண வயதுள்ள ஏழை பெண்களின் வாழ்வில் ஜெயலலிதா
மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இனி கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும்
இனி சந்தோஷம்தான்.
பிரியதர்ஷினி: (பி.எஸ்.சி.பட்டதாரி)
நான்
ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். எனது தந்தை கூலி வேலை செய்கிறார். எனக்கு 2
சகோதரிகள் உள்ளனர். எங்களுக்கு திருமணம் என்பது எட்டாத ஒன்றாக உள்ளது.
முதல்- அமைச்சரின் திருமண உதவித் தொகை- தாலி போன்ற திட்டங்கள் எங்களை
மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. திருமண வாழ்க்கையில் பிரவேசிக்க கூடிய
சூழ்நிலையை படித்த ஏழை பெண்களுக்கு வழங்கி இருப்பது பாராட்டுக்குறியது.
நிஷா: (பி.பி.ஏ.பட்டதாரி)
ஏழை
பெண்களுக்கு திருமண உதவி, தங்க தாலி வழங்குவதாக அறிவித்தது என்னைப் போன்ற
ஏழை பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை
பெருமையுடன் வரவேற்கிறோம். பெண்கள் தலைநிமிர்ந்து நடக்கவும்,
சுதந்திரமாகச் செல்லவும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். முதல்வர்
ஜெயலலிதாவுக்கு ஏழை பெண்கள் சார்பில் நன்றியை தெரிவித்து மகிழ்கிறோம்.
தமிழக
முதல்- அமைச்சராக 3-வது முறையாக ஜெயலலிதா நேற்று பொறுப்பு ஏற்றுக்
கொண்டார். அவர் நேற்று பதவி ஏற்றவுடன் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தேர்தல் அறிக்கையில் கூறிய சில வாக்குறுதிகளை முதன் முதலில்
நிறைவேற்றினார்.
நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்
அனைத்தும் ஏழை-எளிய மக்கள் படித்த பெண்கள், பட்டதாரிகள், பெண் அரசு
ஊழியர்கள் பலன்பெறக்கூடியதாகும். அவர் பதவி ஏற்றவுடன் அறிவித்த இந்த
சாதனைகளை பெண்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
பிரேமகுமாரிபெண் அரசு ஊழியர்)
நான்
கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் அறிவித்த இந்த முதல் சலுகைகள்
பாராட்டுக்குறியதாகும். அதுவும் குரிப்பாக அரசு பணியில் ஈடுபடும் பெண்
ஊழியர்களுக்கு 6 மாதம் பேறு கால விடுப்பு அளித்திருப்பது
வரவேற்கக்கூடியது.
இந்த கோரிக்கையை நீண்ட காலமாக
அரசுக்கு அளித்து வந்தோம். அது தற்போது நிறைவேறி உள்ளது. வேலைக்கு
செல்லும் பெண்கள் பேறு காலத்தில் விடுமுறை கிடைக்காமல் சிரமப்பட்டு
வந்தார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு பெரும்
மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதனால் பிறந்த
குழந்தையை மட்டும் அல்ல குடும்பத்தையும் கவலை இல்லாமல் கவனித்து
கொள்ளலாம். இந்த சலுகை எல்லா பெண்களுக்கும் வரப்பிரசாதமாகும். ஜெயலலிதா
ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களை கவனிக்க மாட்டார் என்ற நிலையை மாற்றி
அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதுவும் பெண்களுக்கு
இந்த சலுகையை வழங்கி இருப்பது ஒட்டு மொத்த பெண் சமுதாயத்திற்கு செய்த
பெரும் சாதனையாகும்.
ஏகாத்தம்மாள்புளியந்தோப்பு, ராஜாத்தோட்டம்)
ஏழைகளுக்கு
20 கிலோ இலவச அரிசி வழங்கி ஏழைகள் வயிற்றில் பாலை வார்த்துள்ளார்
ஜெயலலிதா. அன்றாட பசி- பிணியில் இருந்து ஏழை மக்களை காப்பாற்றுவதற்காக இதை
அறிவித்த முதல்வருக்கு எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
இதுவரை
ஒரு ரூபாய் கொடுத்து ஒரு கிலோ அரிசி வாங்கினோம். இனி அதற்கும் வேலை இல்லை.
அரிசியை முழுமையாகவே இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். நாங்கள் வெறும்
பையை மட்டும் கொண்டு சென்றால் போதும். அரிசி கிடைத்து விடும். ஏழை-
எளியவர்களின் பசியை தீர்த்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடானகோடி நன்றி.
மகாலட்சுமி: (புளியந்தோப்பு)
ரேசன்
கடைகளில் இப்போது அரசு வழங்கும் 20 கிலோ அரிசியை முழுமையாக தருவதில்லை. 10
அல்லது 15 கிலோ மட்டுமே தருகிறார்கள். அதிலும் 5 கிலோ பச்சரிசி, 10 கிலோ
புழங்கல் அரிசி மட்டுமே விநியோகம் செய்கிறார்கள். மீதி அரிசியை தராமல்
ஏமாற்றி விடுகிறார்கள். அரிசி தரமானதாக இல்லை. கல், உமி போன்றவை அதிகம்
உள்ளன. தரமான அரிசியை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
சுசீலா:- (குடும்ப தலைவி)
20
கிலோ இலவச அரிசி வழங்குவது மகிழ்ச்சி அளித்துள்ளது. அந்த அரிசி எங்களுக்கு
முழுமையாக கிடைக்க அரசு உதவ வேண்டும். தரமான அரிசியை தருவார் என்று
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நம்பிக்கை இருக்கிறது.
கலைவாணி: (பி.காம். பட்டதாரி)
ஏழை
பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவியாக ரூ.50 ஆயிரம் வழங்க இருப்பது
மகிழ்ச்சி அளிக்கிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் தங்களுக்கு
திருமணம் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற கவலையில் இருந்தனர். உதவி
தொகையுடன் 1/2 பவுன் தங்க தாலியும், ஜெயலலிதா கொடுத்துள்ளார். இதன் மூலம்
என்னைப் போன்ற திருமண வயதுள்ள ஏழை பெண்களின் வாழ்வில் ஜெயலலிதா
மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இனி கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும்
இனி சந்தோஷம்தான்.
பிரியதர்ஷினி: (பி.எஸ்.சி.பட்டதாரி)
நான்
ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். எனது தந்தை கூலி வேலை செய்கிறார். எனக்கு 2
சகோதரிகள் உள்ளனர். எங்களுக்கு திருமணம் என்பது எட்டாத ஒன்றாக உள்ளது.
முதல்- அமைச்சரின் திருமண உதவித் தொகை- தாலி போன்ற திட்டங்கள் எங்களை
மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. திருமண வாழ்க்கையில் பிரவேசிக்க கூடிய
சூழ்நிலையை படித்த ஏழை பெண்களுக்கு வழங்கி இருப்பது பாராட்டுக்குறியது.
நிஷா: (பி.பி.ஏ.பட்டதாரி)
ஏழை
பெண்களுக்கு திருமண உதவி, தங்க தாலி வழங்குவதாக அறிவித்தது என்னைப் போன்ற
ஏழை பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை
பெருமையுடன் வரவேற்கிறோம். பெண்கள் தலைநிமிர்ந்து நடக்கவும்,
சுதந்திரமாகச் செல்லவும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். முதல்வர்
ஜெயலலிதாவுக்கு ஏழை பெண்கள் சார்பில் நன்றியை தெரிவித்து மகிழ்கிறோம்.
Similar topics
» 3 மாதங்களுக்கு அதிமுக அரசு மீது விமர்சனம் கிடையாது-தமிழக பாஜக
» டில்லியில் முதல்வர் ஜெ.,வுக்கு காத்திருக்கும் பிரமாண்ட வரவேற்பு
» ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்: நெடுமாறன்
» போதைக்கு அடிமையாகி வரும் மாணவர்கள்: ஊக்குவிக்கும் மதுக்கடை ஊழியர்கள்
» அண்ணா பிறந்தநாளில் ஏழைகளுக்கு 4 ஆடுகள்: 1600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள்; ஜெயலலிதா அறிவிப்பு
» டில்லியில் முதல்வர் ஜெ.,வுக்கு காத்திருக்கும் பிரமாண்ட வரவேற்பு
» ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்: நெடுமாறன்
» போதைக்கு அடிமையாகி வரும் மாணவர்கள்: ஊக்குவிக்கும் மதுக்கடை ஊழியர்கள்
» அண்ணா பிறந்தநாளில் ஏழைகளுக்கு 4 ஆடுகள்: 1600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள்; ஜெயலலிதா அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|