Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்பு: சிபிடிடி தலைவர் தகவல்
Page 1 of 1
ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்பு: சிபிடிடி தலைவர் தகவல்
புது தில்லி, மே 18: நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்ட ரூ. 30 ஆயிரம்
கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய (சிபிடிடி)
தலைவர் சுதிர் சந்திரா தெரிவித்தார்.
தில்லியில் புதன்கிழமை கறுப்புப் பணம் குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற
அவர் மேலும் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளில் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து சேர்த்த
கறுப்புப் பணம் ரூ. 30 ஆயிரம் கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதுபோன்ற கறுப்புப் பணம் சேர்ப்பவர்கள் குறித்து புலனாய்வு செய்யவும், விசாரிக்கவும்
சிபிடிடி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம்
கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தால் இவ்விதம் கைப்பற்றப்படும் கறுப்புப்
பணத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் மூலம்
ரூ. 18,500 கோடி கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது.
ஆதாரபூர்வமான தகவல் கிடைக்காமல், எவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடச் செல்வது கிடையாது.
பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை அவர்
மறுத்தார். அதிக வருமானம் ஈட்டும் அதிகாரிகள் அனைவருமே எங்களது கண்காணிப்பு
வளையத்திற்குள் வருகின்றனர் என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் வரை உரிய கணக்கு காட்டிய 1.15 கோடி பேருக்கு அவர்கள்
செலுத்திய வரி திரும்ப (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அளிக்கப்பட்ட
மொத்த தொகை ரூ. 1.04 லட்சம் கோடி.
மார்ச் வரையான காலத்தில் மொத்தம் வசூலான வருமான வரித் தொகை ரூ. 74 ஆயிரம் கோடி.
இத்துடன் ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணமும் சேரும் என்றார்.
கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் மே 15-ம் தேதி வரை 45
நாள்களில் ரூ. 28 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான
தொகையைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.
வருமான வரித்துறையில் புலனாய்வுப் பிரிவு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று
குறிப்பிட்ட அவர், தகவல் பரிமாற்றத்துக்கென தனியான கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட
பிரிவை ஏற்படுத்தப்போவதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் தகவல் கோரும் நாடுகள்
விவரங்களை இந்தப் பிரிவுக்கு அனுப்பினால் போதுமானது. இது தவிர, கிரிமினல் புலனாய்வு
இயக்குநரகத்தை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த வாரம் நிதி அமைச்சர்
பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை அமலாக்கப்
பிரிவுக்குத் தருவதில்லை. எனவே இப்போது வரித்துறை சாராத அமலாக்கப் பிரிவு ஒன்றை
உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் இத்தகைய தகவலைப் பெறுவதற்கு வழி
கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
கறுப்புப் பணம் சார்ந்த விஷயங்களைப் பெறுவதில் இந்தியா அதிக தீவிரம்
காட்டுவதாகவும், இப்போது இதுபோன்ற விவரங்களை அளிப்பது தொடர்பான நடைமுறைகள் மாறி
வருவதாகவும் குறிப்பிட்டார்.
வரி விதிக்கப்படாத14 நாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுடன் பேச்சு
நடத்தப்பட்டு வருகிறது. பஹாமஸ், நெர்முடா, ஐசில் ஆஃப் மேன் ஆகிய நாடுகளுடன்
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகள் தகவல்களை அளிக்கின்றன.
இதுபோன்ற தகவல்களை அளிக்காத நாடுகள் ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் என
அறிவிப்பதற்கு விதிமுறையில் இடமுள்ளது. இவ்விதம் அறிவிக்கப்பட்ட நாடுகளைச்
சேர்ந்தவர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்தாலோ, அல்லது இத்தகைய நாடுகளில்
இந்தியர்கள் வர்த்தகம் செய்தாலோ அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றார்
அவர்.
Similar topics
» நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» மாயமான வக்கீல் சதீஷ்குமார் ஏரியிலிருந்து சடலமாக மீட்பு
» சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து குஷ்பு விலகல்
» அணு ஆயுத தயாரிப்பை தீவிரப்படுத்துகிறது பாகிஸ்தான்: நியூஸ்வீக் தகவல்
» கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா ?
» மாயமான வக்கீல் சதீஷ்குமார் ஏரியிலிருந்து சடலமாக மீட்பு
» சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து குஷ்பு விலகல்
» அணு ஆயுத தயாரிப்பை தீவிரப்படுத்துகிறது பாகிஸ்தான்: நியூஸ்வீக் தகவல்
» கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|