Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


அணு ஆயுத தயாரிப்பை தீவிரப்படுத்துகிறது பாகிஸ்தான்: நியூஸ்வீக் தகவல்

Go down

அணு ஆயுத தயாரிப்பை தீவிரப்படுத்துகிறது பாகிஸ்தான்: நியூஸ்வீக் தகவல் Empty அணு ஆயுத தயாரிப்பை தீவிரப்படுத்துகிறது பாகிஸ்தான்: நியூஸ்வீக் தகவல்

Post by Admin Tue May 17, 2011 10:48 am

இஸ்லாமாபாத், மே 16: பாகிஸ்தான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பணியை
தீவிரப்படுத்தி வருகிறது. இதன் மூலம் புளூட்டோனியம் உற்பத்தியை அதிகரித்துள்ளது.
இதற்காக நான்காவது அணு உலையை அமைத்து வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
வர்த்தக ரீதியிலான செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை "நியூஸ்வீக்' இதழ்
வெளியிட்டுள்ளது. இஸ்லாமாபாத்திலிருந்து 140 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குஷாப் அணு
மின் நிலையத்தில் நான்காவது அணு உலை கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக
செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அணு உலை 2013-ல் உற்பத்தியைத் தொடங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நான்காவது அணு உலையை அந்நாடு தன்னகத்தே
கொண்டிருக்கும். இதன் மூலம் புளூட்டோனியம் உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளவும், அதைக்
கொண்டு அணு ஆயுதத் திட்டத்தை அதிகரிக்கவும் அந்நாடு திட்டமிட்டுள்ளதாக அந்த இதழுக்கு
பேட்டியளித்த நிபுணர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்துள்ள நிலையில்
புளூட்டோனியம் தயாரிப்பை அதிகரிக்கும் பாகிஸ்தானின் திட்டம் வெளியாகியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை கருத்து எதையும் வெளியிடவில்லை. இருப்பினும்
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது குறித்து கூறுகையில், பாகிஸ்தான்
ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை தயாரித்து வைத்துள்ளது. ஆண்டுக்கு 8
முதல் 20 குண்டுகள் வரை அந்நாடு தயாரித்து வைத்துள்ளது. எனவே அந்நாடு அணுகுண்டுகளை
அதிகரித்துக்கொள்வதென்ற முடிவு இப்போது எடுத்ததல்ல. பல ஆண்டுகாலமாக அணுகுண்டுகளை
அந்நாடு தொடர்ந்து தயாரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானிடம் உள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் இதைப்பற்றி
அந்நாடோ, அமெரிக்காவோ எவ்வித கவலையும் வெளியிடவில்லை என்று சர்வதேச அறிவியல் மற்றும்
பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த பால் பிரானன் தெரிவித்தார்.
பாகிஸ்தானைப் பொருத்தமட்டில் இந்த விஷயத்தில் ஒரு குழப்பமான சூழலே நிலவுகிறது.
ஆனால் ஈரான், யுரேனியத்தை செறிவூட்டுகிறது என்பதும், வட கொரியாவோ
புளூட்டோனியத்தை அதிகம் தயாரிக்கிறது என்பதோ அனைத்து நாடுகளுக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி ரகசியமாக தனது அணுசக்தி திறனை தொடர்ந்து
அதிகரித்து வருகிறது பாகிஸ்தான் என்று முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அமைச்சரவையில்
பாதுகாப்புத்துறை இணையமைச்சராக இருந்த எரிக் இடல்மேன் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ûஸ விட அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களைக் கொண்டதாக பாகிஸ்தான்
இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவிலிருந்து அச்சுறுத்தல் என்று கூறி
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோடி டாலர்களை செலவிட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்த விவகாரம் வெறுமனே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரம் என்று
அமெரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம்நுன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும், ரஷியாவும் தங்களிடையிலான பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து
கடந்த காலங்களில் அணு ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவை உணர்ந்துள்ளன. இதைப்போல இந்தியா,
பாகிஸ்தான் இடையே இப்போது மிகவும் பயங்கரமான காலகட்டம் நிலவுகிறது. அதிலிருந்து
இரண்டும் கற்று உணர வேண்டும். அதற்காக அனைவரும் பாதிக்கப்படுவது ஏற்க முடியாதது
என்று சாம்நுன் தெரிவித்தார்.
இப்போது உலகம் முழுவதுமான பார்வை மாறியுள்ளது. இந்த புவியைப் பாதுகாக்க
வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில் அணு ஆயுதங்கள் மிகவும்
ஆபத்தானவை என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அணுகுண்டுக்கான மூலப்பொருள் அல்லது அணுகுண்டுகளை தயாரித்து வைப்பது என்பது
மிகவும் ஆபத்தான விஷயம். மேலும் யுரேனிய சுரங்கம் அந்நாட்டில் உள்ளது. அதை
செறிவூட்டும் நுட்பத்தை அந்நாட்டு விஞ்ஞானி ஏ.கியூ. கான் அளித்துள்ளார்.
உலக நாடுகளின் தலைவர்கள் கவலைப்படுவதெல்லாம் இத்தகைய ஆயுதங்கள் பயங்கரவாதிகள்
கைகளில் சிக்கிவிடக்கூடாது என்பதுதான். அணு ஆயுதங்கள் தயாரிப்போ அல்லது அவற்றை
ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குக் கொண்டு செல்வது குறித்து தெளிவான சிந்தனை கிடையாது,
என்று இந்திய-பாகிஸ்தான் தூதரக அதிகாரி மன்சூர் இஜாஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ அகாதெமி அமைந்துள்ள அபோட்டாபாத்தில் சர்வதேச பயங்கரவாதி
தங்கியிருந்த விவகாரம் இப்போது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜிகாதி குழுக்கள்,
லஷ்கர்-இ-தொய்பா குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் அடைக்கலம் அளித்திருப்பது கவலையை
மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
அடுத்த 30 ஆண்டுகளில் பாகிஸ்தானின் அணு ஆயுத வளர்ச்சி எவ்விதம் இருக்கும்
என்பதை ஆய்வு செய்து பார்த்தபோது அது கவலையளிப்பதாகவும், மிகப்பெரிய அழிவு
ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதையும் கணிக்க முடிவதாக சர்வதேச அளவில் உத்திகள்
வகுக்கும் மையத்தின் இயக்குநர் ஷரோன் ஸ்குவாசோனி தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களை பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பாக வைத்திருக்கும் என அமெரிக்கா
தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் கையில் இவை சென்று விடுவது தொடர்பாக அந்நாட்டுடன்
அமெரிக்கா விவாதித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராணுவத்துக்கு இந்தியா செலவிடும் அளவுக்கு தங்களிடம் நிதி வளம் இல்லை என்பது
பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும் இந்தியாவுக்கு தொடர்ந்து
அச்சுறுத்தல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான் கவனம்
செலுத்துவதாக அந்நாட்டின் அணு இயற்பியல் விஞ்ஞானி பர்வேஸ் ஹுட்போய் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பான இடங்களில் பத்திரமாக
வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அணு ஆயுதங்களை பாதுகாப்பதற்கு அமெரிக்க
உதவி தேவையா? என கேட்டபோது அதை அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப் ஏற்கவில்லை. ராணுவ
வீரர்களின் இரண்டு பிரிவு அணு ஆயுதங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஏறக்குறைய 18 ஆயிரம் வீரர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒருவேளை
இவர்களை மீறி அந்த ஆயுதங்களைக் கைப்பற்ற முயன்றால் அது மிகவும் துயரமான நாளாக
இருக்கும் என்று அப்போது முஷாரப் தெரிவித்ததாக நியூஸ்வீக் செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum