Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..?

Go down

புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..? Empty புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..?

Post by Admin Tue May 17, 2011 8:40 pm

புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..?

- புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் தவிர்க்கப்பட்டிருக்குமா..?
-சிங்களவரின் படுகொலைகளுக்கு நினைவு தினங்கள் தீர்வு தருமா..?

புலிகள் என்றொரு இயக்கம் தோன்றாமலும், போராட்டம் என்ற வடிவம் உருவாகாமலும்
இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் நின்மதியாக வாழ்ந்திருக்க முடியுமா..?

புதுமாத்தளன் சோகங்களின் இரண்டாவது ஆண்டு நிகழ்வில் கொஞ்சம் வித்தியாசமாக
சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1956, 1958, 1978, 1983 என்று
சிங்களவர்கள் நடத்திய கலவரங்கள் புலிகள் போராடாமல் இருந்தபோது வந்தவைதான்.
இதில் கலவரம் என்ற சொல் முக்கியமானது.

நிதானமாக இருக்க முடியாத ஓர் இனம் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடும்..
எனவேதான் புலிகள் என்ற அமைப்பு வந்தாலும் வராவிட்டாலும் புதுமாத்தளனில்
கொல்லப்பட்ட மரணங்கள் கலவரம் என்ற வடிவில் வந்து சேர்ந்திருக்கும். கலவரம்
பண்ணாமல் சிங்கள இனத்தால் வாழ முடியாது என்பதே வரலாறு. புலிகள்
போராடினாலும், போராடாவிட்டாலும் சிங்கள சமுதாயத்தின் கலவர மனோநிலை
அடங்கிப் போகாது.

சரி.. புலிகள் போராடியதால் என்ன நடந்தது..?

போராட்டக்களத்தில் நின்றவர்கள், அவர்களை நம்பி வன்னியில் இருந்தவர்கள்,
தளபதிகள், முக்கிய உறுப்பினர் உட்பட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்..

இதற்கு யார் பொறுப்பு…?

இந்தியா என்று கோபப்படுகிறோம்…! உலக சமுதாயம் காரணம் என்று விரக்தியடைகிறோம்..!
நமது கோபத்திலும் விரக்தியிலும் நியாயம் உண்டு…

ஆனால்..இதற்கு நாமும் பொறுப்பு என்று நமது மனச்சாட்சியை தொட்டு வெளிப்படையாகக் கூற மறுக்கிறோம்…

இதற்கு ஓர் உதாரணம் :

இரண்டாவது உலக மகாயுத்தம் முடிந்ததும் நூரம்பேர்க் ஜட்ஜ்மன்ற் என்ற
பிரபலமான வழக்கு நடைபெற்றது… அதில் போர்க் குற்றவாளிகள் தண்டனை
பெற்றார்கள்..

போர் நடக்கும்போது சரணடையும், கைது செய்யப்படும் மனிதர்களை நடாத்துவதற்கு
ஒரு வழிமுறை இருக்கிறது. நோயுற்ற போர்க் கைதிகளைக்கூட இறக்கவிடக்கூடாது
என்ற விதி அதில் இருக்கிறது.

எதிரிகள் நமது கையில்… கேட்கப்பார்க்க நாதியில்லை என்று ஜேர்மனிய நாஜிகள்
நடாத்திய போர்க்குற்றத்திற்காக பலரை தூக்குமரத்தில் ஏற்றியது இந்த வழக்கு.
இம்மாதம் வெளியான வரலாறு டேனிஸ் சஞ்சிகையில் இந்த வழக்கு வெளியாகியுள்ளது.
காயப்பட்டவர்களை பராமரிக்க மறுத்தவர்களில் தூக்குத் தண்டனை பெற்ற
தளபதிகளின் பெயர்களும் பட்டியலாக வந்துள்ளது.

மகிந்தராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, டக்களஸ் தேவானந்தா போன்றவர்கள் இந்த நூரம்பேர்க் ஜட்ஜ்மன்ரை வாசித்துப் பார்க்க வேண்டும்.

அந்த நூரம்போர் ஜட்ஜ்மன்ற் ஒரு மகத்தான கவலையை வெளிப்படுத்துகிறது.. ஏன்
இந்த மரணங்கள்.. இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது…

உலகம்…
அத்தனை மதங்களும்…
அத்தனை சமுதாய தாபனங்களும்…
அத்தனை கல்விமான்களும்..
அத்தனை ஊடகங்களும்..
அத்தனை நாடுகளும் பொறுப்பு… என்று அந்த வாதாட்டம் முடிகிறது..

இதில் பொறுப்பு என்ற சொல் மிக முக்கியம்..

பாப்பரசர், அமெரிக்க அதிபர்கள், சாமியார்கள், இஸ்லாமிய காமய்னிகள்,
புத்தமத குருக்கள், மார்க்சிஸ்டுக்கள், ஆஸ்திகர், நாஸ்திகர், பொதுமக்கள்
என்று அனைவருமே பொறுப்பற்று நடந்ததால்தான் இந்த உலக யுத்த அழிவு வந்ததென
நூறம்பேர்க் வழக்கு சுட்டிக்காட்டுகிறது.

இதில் நமக்கு தொடர்பில்லை என்று வேடம்போடுவோர் ஏமாற்றுப் பேர்வழிகளே..

புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் 140.000 பேரைக் கொன்றொழித்த போர்.
இந்தத் தவறும் யூதப் படுகொலை போன்றதே.. இதற்கும் மேலே சொன்ன அத்தனைபேருமே
பொறுப்பு..

இதனால் தமிழர் மட்டுமல்ல..

புத்த, இந்து, கிறீத்தவ, இஸ்லாம் மதங்கள் தோல்வியடைந்திருக்கின்றன..
இந்தியா, சீனா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ரஸ்யா அனைவரும் தோல்வியடைந்திருக்கிறார்கள்…

இப்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியாகியிருக்கிறது…

புலிகள் மீது ஆறு பெரும் குற்றங்களும்…சிங்கள இனவாத அரசின் மீது ஐந்து பெரும் குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன..

இனி என்ன செய்யலாம்…

படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நினைவு வந்துவிட்டது தீபம் ஏற்றலாமா..?
யூலைக்கலவரத்திற்கு தீபம் ஏற்றி.. ஏற்றி.. மறந்து போனதுபோல இதுவும் ஒரு தொடர் கதையா..?
ஏற்றும் தீபங்களை மனச்சாட்சியோடு உற்றுப் பாருங்கள்..!
அந்த நெருப்பு உங்களிடம் ஒரு கேள்வி கேட்கும்..!
நீங்கள் இதற்கு பொறுப்பில்லையா என்று…?

பொறுப்பில்லை என்று சொல்ல எவராலும் முடியாது… எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பொறுப்பாளிகளே..
இனியாவது நாம் பொறுப்புடன் நடக்க வேண்டும்…!

ஐ.நா அறிக்கை சிங்கள இனவாத அரசை புதுமாத்தளனைவிட ஆபத்தான பொறிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது…
இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை எழுதிக் கொடுத்தால்கூட, தப்ப முடியாத வரலாற்று சேற்றை தன் முகத்தில் அது அப்பியிருக்கிறது..

ஐ.நா அறிக்கையில் இருந்து சிறீலங்காவை காப்பாற்ற இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகளாலும் முடியாது என்பதே நிதர்சனம்..
இது ஈழத் தமிழினத்திற்கு ஓர் அரிய வாய்ப்பு..
இதை வென்றெடுக்க வேண்டும்…

அதை விளங்கியவர்கள், முன்னெடுக்க தகுதியானவர் எவரும் இப்போது உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆடுகளத்தில் இல்லை..

ஆகவே..

மக்களே.. தூய ஜனநாயக போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.. எகிப்து, ரூனிசியா போல..
இதுவரை அரசியல் சாயம் பூசாத புதிய முகங்கள் ஜனநாயக போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும்.
மத்திய கிழக்கு, வடக்கு ஆபிரிக்காவில் நடைபெறும் ஜனநாயகப் போராட்டம்போல மக்கள் போராட்டம் மலர வேண்டிய காலம் இது..

ஐ.நா அறிக்கையை துணையாக வைத்து, இந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால்
ஈழத் தமிழ் மக்கள் சில முக்கிய இலக்குகளை குறுங்காலத்தில் தொட்டுவிட
முடியும்.

பாலஸ்தீன பிரச்சனை முடிக்கப்பட்டு, பாலஸ்தீன ஸ்ரேற் வரப்போகிறது.. அதோடு
இணைந்த போராட்டமான ஈழத் தமிழர் போராட்டமும் ஒரு நல்ல இலக்கை எட்ட
வாய்ப்புள்ளது.

இறந்த பொதுமக்கள், மாவீரர் அனைவருடைய இறப்புகளுக்கும் நாமும் பொறுப்பேற்று அவர்கள் கனவுகளை நிறைவேற்றி வைக்க இதுதான் தருணம்..

ஒரு காலமும் சமுதாயம் பின்னடைவதில்லை.. அது ஒவ்வொரு காலத்திலும் வளர்ச்சியடைந்து செல்கிறது என்பது உலகப்புகழ் பெற்ற பழமொழி..

ஈழத் தமிழினமும் பின்னடைந்துவிடாது, அது வரலாற்றின் நியதி..

தீபத்திற்கு ஓர் அர்த்தமிருக்கிறது…

எண்ணெய் அறிவு..
திரி நெறி..
நெருப்பு உணர்ச்சி..

அறிவாகிய எண்ணெய் வற்றினால் உணர்ச்சியாகிய நெருப்பு நெறியாகிய திரியை எரித்து எல்லாவற்றையும் நாசமாக்கிவிடும்..

இறந்தவர்களை அஞ்சலிக்க தீபம் ஏற்றுவது இந்த மூன்று நிலையிலும் நாம் சமமாக
இருக்கிறோம் என்று விளக்கத்தான். இந்த மூன்று நிலையையும் நாம் சமமாக
வைத்திருந்தால் நமது விடுதலைத் தீபமும் ஊடுபற்றியிருக்காது..

புதுமாத்தளன் சோகங்களுக்கு தீபமேற்றுவோர் அந்தத் தீபங்களை ஒரு தடவை உற்று நோக்குங்கள்..
சிந்தனையை மாற்றிப் போடுங்கள்..
இந்த இரண்டாண்டு நினைவில் உங்களுக்காக இரண்டு நம்பிக்கைகள்..

ஒன்று..
புலிகள் போராடியிருக்காவிட்டால் ஒட்டுமொத்தத் தமிழினமுமே அழிக்கப்பட்டிருக்கும்..

இரண்டு..
புலம் பெயர் தமிழன் என்ற பலமிக்க சக்தி உலகில் பிறந்திருக்காது..

இந்த இரண்டு விடயங்களையும் மனதில் ஏந்தி நடவுங்கள்..

மூன்றாவதாக ஈழத் தமிழினத்திற்கான விடிவு வரும்..


ஏனென்றால் புதுமாத்தளன் இழப்புக்களுக்கு மூன்றாவது ஆண்டு விளக்கேற்றும்போது ஒரு விடிவு வந்திருக்க வேண்டும்..

இரண்டாவது விளக்கின் தொடர்கதையாக மூன்றாவது விளக்கை ஏற்றினால் அது
அஞ்சலியல்ல சடங்கு.. இதை இன்றாவது புலம் பெயர் ஊடகங்களை நடாத்துவோர்
புரிந்து மக்களுக்குப் புது வழி காட்டவேண்டும்.

- அலைகள் புதுமாத்தளன் இரண்டாவது ஆண்டு பார்வை. 17.05.2011
http://www.alaikal.com/news/?p=70402
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
» ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்: நெடுமாறன்
» ஜீமெயில் அக்கொண்டினை இழந்தால், பிளாக்கரையும் இழப்பீர்கள்! செய்ய போவது என்ன?
»  எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை-விடுதலைப் புலிகள்
» போர்க்குற்றம் தொடர்பில் எமது தரப்பு நியாயங்களை கூற ஐ.நா குழு, வாய்ப்பளிக்க வேண்டும் - வி.புலிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum